சனி, 8 ஜூன், 2013


அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன்.

நாம இங்க படிச்சிட்டு போய் வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும்.

டீ டம்ளர் வைக்கும் நச் சத்தத்தின் டெசிபல் அது காலையிலிருந்து நீங்கள் கேட்க்கும் எத்தனாவது டீ என்பதை பொருத்தது# 3ம் விதி!

எம்'மதமும' பிடிக்காத யானையை அதன் சம்மதம் இல்லாமல் கோவிலில் பூட்டி வைத்தால் அதற்கு மதம் பிடிக்காமல் என்னை செய்யும்.

சேலரி ஸ்லிப் தரும் சந்தோஷத்தை விட, க்ரெடிட் கார்ட் பில் தரும் பயம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கிறது. #ரிசீவ்ட் க்ரெடிட் கார்ட் பில்.

பெண்கள் திருமணத்திற்குத் தரும் விலைதான் காமம்.ஆண் காமத்திற்குத் தரும் விலைதான் திருமணம்.

உங்க மனைவி மட்டும் சாமி கும்பிடுறாங்க? என நாத்திகரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்."அது அவ நம்பிக்கை" என்றார்..!.

என்ன தான் தங்கமான மனசுக்காரரா இருந்தாலும் அவர தூக்கிட்டு போய் சேட்டு கடைல அடகு வைக்க முடியாது.

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கிறது.

அமெரிக்கால கரண்ட்கட்டானா 911’போன்பண்ணுவாய்ங்க! ஜப்பான்ல ப்யூஸபுடுங்கி பாப்பாய்ங்க! தக்காளி நம்மூர்ல, பக்கத்துவீட்ட எட்டிபார்க்குறாய்ங்க!.

உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!விஜய் படங்கள் கூட இரண்டாவது இடம்தான் !!!

முன்பெல்லாம் விதவிதமாக செல்போன்கள் வரும். இப்போதோ வெரும் செங்கக்கல் வடிவத்தில் தான் எல்லாம் போன்களும் வருகின்றன. #கற்பனைவறச்சி

ஒலிக்கும் பாடலில் கவனமின்றி ஏதேதோ யோசித்து பின் பாடல் முடிந்ததும் அதை மீண்டும் கேட்க விரும்புகிறது மனம். #சஞ்சலம்

எடுத்த செயலை முடிக்காமல் பாதியிலேயே கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக